பண்டுகாபய மன்னன் (கி.மு. 437 - 367)

சட்டரீதியான அநுராதபுரத்தின் முதலாவது அரசன் பண்டுகாபயன் ஆவான். இவனது தாய் உன்மாத சித்ரா. தந்தை தீக்ககாமினி. 77 வருடங்கள் அநுராதபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தான். 

அரசியல் சேவைகள்.

  •  77 வருடங்கள் அநுராதபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தான். 
  • சிதறி இருந்த ஆரிய குழுக்களை ஒன்று படுத்தினான். 
  • அநுராதபுரத்தை திட்டமிட்ட நகரமாக உருவாக்கினான். 
  • நகர குத்திக்க பதவி இவனாலேயே முதன் முதலில் உருவாக்கப்பட்டது.
  •  கிராமங்களுக்கு எல்லை விதித்தான்.

பொருளாதார சேவைகள்.

  • அபாய வாவி, ஜயா வாவி, காமினி வாவி போன்ற குளங்களை அமைத்தான்.


சமய  சேவைகள்.
  • சித்தராஜ, காலவேல ஆகியோருக்கு ஆலயம் அமைத்தான்.
  • வெசமுனி பேய்க்கு பூசை செய்தான்.
  • பிராமணர்களின் வணக்கத்தை (சொத்திசாலா) ஆதரித்தான்.